நாலடியார் | TNPSC Important Notes With PYQ
நூல் குறிப்பு
- ஆசிரியர் : சமண முனிவர்கள் பலர்
- தொகுத்து அதிகாரம் வகுத்தவர் : பதுமனார்
- முப்பாலாகப் பகுத்தவர் : தருமர்
- உரைகண்டவர்கள் : பதுமனாரும், தருமரும்
- பா வகை : வெண்பா
சிறப்புப் பெயர்கள்:
- • நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்
- • பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
- • நாலடியார் பெயர்க்காரணம்: வெண்பாக்கள் அனைத்தும் 4 அடிகளால் அமைந்ததால் 'நாலடி' என்றும், சிறப்பு கருதி 'ஆர்' விகுதி சேர்த்து 'நாலடியார்' என்றும் வழங்கப்பெற்றது.
- • திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
- • 400 பாடல்களை உடையதால் 'நாலடி நானூறு' எனவும் வழங்கப்பெறும்.
- • பெருமுத்தரையரைப் பற்றிக் குறிப்பிடும் நூல் நாலடியார்.
- • நாலடியாரின் உரைகளை உள்ளடக்கிய நூல் நாலடியார் உரை வளம்
- • நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜி.யு.போப்
அமைப்பு முறை & முப்பால் பகுப்பு
* நாலடியாரில் 40 அதிகாரங்களும், 11 இயல்களும் உள்ளன.
* முப்பால் பகுப்பு:
| பால் | அதிகாரங்கள் | இயல்கள் |
|---|---|---|
| அறத்துப்பால் | 13 அதிகாரங்கள் | 2 இயல்கள் |
| பொருட்பால் | 24 அதிகாரங்கள் | 7 இயல்கள் |
| காமத்துப்பால் / இன்பத்துப்பால் | 3 அதிகாரங்கள் | 2 இயல்கள் |
| மொத்தம் | 40 அதிகாரங்கள் (400 பாடல்கள்) | 11 இயல்கள் |
திருக்குறளும் நாலடியாருக்கும் (சிறப்புத் தொடர்கள்)
- • திருக்குறளுக்கு அடுத்த மற்றும் இணையாக வைத்துப் போற்றப்படும் நூல் நாலடியார்.
-
• "ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"
(நாலு - நாலடியார்; இரண்டு - திருக்குறள்)
-
• "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்"
(நாலு - நாலடியார்; இரண்டு - திருக்குறள்)
- • "சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது" என்பது நாலடியாரின் பெருமையைக் குறிக்கும் பழமொழி.
பாடல்கள், சொற்பொருள் மற்றும் விளக்கம்
6 ஆம் வகுப்பு பழைய புத்தகம்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்வினைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு."
* சொற்பொருள்:
பாடல் பொருள்:
நாயின் கால்விரல்கள் இடைவெளியின்றி நெருங்கி இருக்கும். அதனைப்போலச் சிலர் நம்மோடு மிகவும் நெருக்கமாகப் பழகினாலும், ஈயின் கால் அளவுக்குக்கூட நமக்கு உதவ மாட்டார்கள்; அப்படிப்பட்டவர்களின் நட்பால் என்ன பயன்? ஆனால், வாய்க்கால் தொலைவில் உள்ள நீரைக்கொண்டு வந்து வயலுக்குப் பாய்ச்சி பயிர் விளைய உதவும். அதுபோல தூரத்திலிருந்தாலும் நமக்கு உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள்; எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களின் நட்பைத் தேடிச் சென்று நாம் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
அழியச்செல்வம் 7ஆம் வகுப்பு புதிய புத்தகம்
மிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற."
சொற்பொருள்:
பாடல் பொருள்:
கல்வியைப் பொருள் போல அறியாதவாறு வைத்திருப்பினும் திருடரால் களவாட முடியாது; பிறருக்குக் கற்றுக்கொடுத்தாலும் குறைவுபடாது; சிறந்த வலிமைமிக்க அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் மக்களுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய உண்மையான செல்வம் கல்வியே ஆகும்; மற்றவை அழியக்கூடியவை என்பதால் நிலையான செல்வம் ஆகாது.
முக்கிய மேற்கோள்கள்
- • "குறிஞ்சி யழகும் கொடுத்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல கல்வி அழகே அழகு"
- • "கல்வி கரையில, கற்பவர் நாள்சில"
- • "பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்"
TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
1. நாலடி நானூறு என அழைக்கப்படும் நூல் எது? [EXAM - 2016 / VIGILANCE STD - DEGREE - 2016]
2. நாலடியார் நூலின் ஆசிரியர் யார்? [EXECUTIVE OFFICER STD - SSLC - 2016 / IV-2018]
3. கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமில்லாததைக் கூறுக: [ASSISTANT JAILOR STD - DEGREE 2016]
II. கபிலர் பாடிய அறநூல் 'இன்னா நாற்பது'
III. நான்மணிக்கடிகையில் உள்ள நூறு பாடல்களும் நான்கு நான்கு கருத்துக்களைக் கொண்டு இயங்குவது
IV. அம்மை என்னும் வனப்பின்பாற்படும் காரியாசான் இயற்றிய நூல் சிறுபஞ்சமூலம் என்பதாகும்.
4. பின்வருவனவற்றில் பொருந்தாததைத் தேர்வு செய்க: [EXECUTIVE OFFICER STD - DEGREE - III-2018]
5. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது? [GROUP-II - 2018]
6. நாலடியாருக்கு வழங்கும் சிறப்புப் பெயர் யாது? [JUNIOR INSPECTOR - 2018]
7. பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது? [GROUP-IV - 2019]
8. நாலடியார் எனும் நூலைப் பாடியவர்கள் யார்? [JAILOR STD - DEGREE - 2019]
9. நாலடியாரைத் தொகுத்தவர் யார்? [JAILOR STD - DEGREE - 2019]
10. 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்' என்னும் தொடரில் 'நால்' என்பது எந்த நூலைக் குறிக்கிறது? [EXECUTIVE OFFICER STD - DEGREE - IV-2022]
11. 'கல்வி அழகே அழகு' என்றும்; 'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல் எது? [GROUP-II - 2022]